Connect with us

உலகம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் பலி, பலரை காணவில்லை

Published

on

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை சிக்கி 110 பேர் உயிரிழந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

ராய்காட் (Raigad) மாவட்டத்தின் Taliye கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளன.

இதனால் மேலும் பலர் மண்ணில் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படுகின்றது.

இந்த அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் பேரிடர் மீட்புக் குழுவினரும், தீயணைப்பு படையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாதளவிற்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனைத் தவிர ரட்னகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.