Connect with us

உள்நாட்டு செய்தி

மலையக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை 18 வயது குறைந்தவர்களாயின் அவர்களை வீட்டு வேலைகளுக்கு அனுப்பக்கூடாது- ஜீவன்

Published

on

மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நேற்று (20) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

“இனிவரும் காலங்களில் மலையக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை 18 வயது குறைந்தவர்களாயின் அவர்களை வீட்டு வேலைகளுக்கு அனுப்பக்கூடாது. இதற்கு மாற்று நடவடிக்கையாக எமது தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் ஊடாகவும், பிரஜாசக்தி நிலையத்தின் ஊடாகவும் அவர்களுக்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.

அச்சிறுமியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கன்றேன. மலையக உறவுகள் தத்தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார்.