Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

மேலும் மூவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதற்கமைய நாட்டில் இதுவரை பதிவாகிய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆகும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மொறட்டுவ பகுதியில் வசித்த 84 வயதான பெண் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் கொழும்பு 10 இல் வசித்த 70 வயதான ஆண் IDH வைத்தியசாலையிலும், கொழும்பு 13 இல் வசித்த 75 வயதான ஆண் தேசிய வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *