Connect with us

Uncategorized

8 ஆம் திகதி பெசில் பாராளுமன்ற உறுப்பினராகின்றார்?

Published

on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஸவை நியமிப்பதற்காக அவரது பெயர் அடங்கிய ஆவணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இன்று (06) தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், எதிர்வரும் 8 ஆம் திகதி பெசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் என கூறினார்.