Connect with us

உள்நாட்டு செய்தி

யாழில் கூடிய தமிழ் கட்சிகள்

Published

on

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன்போது மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.