Connect with us

உள்நாட்டு செய்தி

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதும்: மேல் மாகாணத்திற்குள் ரயில் சேவைகள்

Published

on

எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதும், மாகாணத்திற்குள் மாத்திரம் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10 மணி வரை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பயணிகளுக்காக மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 17 ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியசட்கர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.