Connect with us

உள்நாட்டு செய்தி

மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு காலி களுத்துறை மாத்தறை நுவரெலியா ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம, குருவிட்ட, கலவான மற்றும் எஹெலியகொட பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.