Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் கொரோனா தொற்று நிலவரம்

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, 1015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (18) இதுவரையில் 2,478 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில்147,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,516 பேர் இன்று (18) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121,145 ஆக அதிகரித்துள்ளது.