Connect with us

உள்நாட்டு செய்தி

A\L பெறுபேறுகள் இன்று வெளியாகும்

Published

on

2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படவுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.

இம்முறை உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.