Connect with us

உள்நாட்டு செய்தி

2000 ரூபா கொடுப்பனவை பெறுவதில் மலையத்தில் அசௌகரியம்

Published

on

அரசாங்கத்தால் சிரேஸ்ட பிரஜைகளுக்கு மாதந்தம் வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை பெற மலையக பகுதிகளில் வாழும் முதியவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த கொடுப்பனவை பெற இன்று (12) காலை முதல் ஹட்டன், பொகவந்தலாவ உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தபாலகங்களின் முன்னாள் சிரேஸ்ட பிரஜைகள் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

அதற்கமைய இன்று (12) அரச விடுமுறை என்பதை அறியாத முதியவர்கள் காலை முதல் தபாலகங்களில் காத்திருந்து வெறுமையாக வீடு செல்வதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.