Connect with us

உள்நாட்டு செய்தி

இளைஞனை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில், இளைஞனுக்கு பிணை

Published

on

மஹரகம பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி ஏப்ரல் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை விடுவிக்கப்பட்டுள்ள சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இருவரும் இன்று (30) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த லொறியின் சாரதி அப்புத்தளை பிட்ரத்மலை தோட்டத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.