Connect with us

உள்நாட்டு செய்தி

நியூ டயமன்ட் கப்பல் விவகாரம் தொடர்பில் நட்டயீட்டினை அறவிடுவது தொடர்பாக சட்டமா அதிபருடன் ஆலோசனை

Published

on

நியூ டயமன்ட் கப்பலில் தீ பரவியதால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான நட்டயீட்டினை அறவிடுவது தொடர்பாக சட்டமா அதிபருடன் ஆலோசிக்கவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.

இந்த நட்டயீட்டுக்கான ஆவணக் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டார்.

நியூ டயமன்ட் கப்பலில் பரவிய தீயை அணைப்பதற்கான செலவிற்காக 442 மில்லியன் ரூபா ஏற்கனவே அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.

இத்தகைய அனர்த்தங்களை முகாமைத்துவப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்குள் ஏற்படுத்துவதற்காக இந்த பணத்தை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

அத்தோடு கப்பலின் கெப்டனிடமிருந்தும் 12 மில்லியன் ரூபா நட்டயீடு அறவிடப்பட்டுள்ளது.

.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *