உள்நாட்டு செய்தி
ஊழல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் ரோஹித்த

அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா மற்றும் சொத்துக்களை ஈட்டியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் நிராபராதி என தெரிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.