Connect with us

உள்நாட்டு செய்தி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலி விசாரிக்கப்படுவார்.

Published

on

கைது செய்யப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தின் விதிகளுக்கு இணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் அவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *