Connect with us

Sports

இந்தியாவுக்கு வைத்தியம் பார்த்த இங்கிலாந்து

Published

on

இந்திய அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்துள்ளது.

அஹமதாபாத்தில் நேற்று (12) இரவு நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்து.

இதன்படி முதலில் துடுப்பெபடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சிரயாஸ் ஐய்யர் மாத்திரம் 67 ஓட்டங்களை பெற, இங்கிலாந்தின் பந்து வீச்சில் ஜெப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜேசன் ரோய் பெற்ற 49 ஓட்டங்கள் உதவியுடன் 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

ஆட்டநாயகனாக ஆச்சர் தெரிவானார்.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளை கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது T20 போட்டி அஹமதாபாத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.