Connect with us

Sports

அடிகாதிங்க அழுதுருவேன் – இலங்கை, மேற்கிந்திய அணியிடம் கெஞ்சல்

Published

on

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியடைந்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்றியில் வெற்றிப்பெற்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.

அதற்கமைய முதலில் தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை சார்பாக தனுஸ்க குணதிலக்க அதிகூடிய 96 ஓட்டங்களை பெற்றார்.

மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் ஜேசன் மொஹம்மட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து 274 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி எவன் லூவிஸ் பெற்ற 103 ஓட்டங்கள் உதவியுடன் 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக இழப்புக்கு 274 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

இலங்கையின் பந்து வீச்சில் நுவான் பிரதீப், திசர பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

எவன் லூவிஸ் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இதற்கமைய 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை வெஸட் இண்டிஸ் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இறுதி ஒரு நாள் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.