Connect with us

உள்நாட்டு செய்தி

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.!

Published

on

கல்வி அமைச்சின் கூற்றுப்படி, கடந்த பத்து வருடங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கை சுமார் நாற்பதாயிரம் குறைந்துள்ளது.

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் தரவுகளை ஆராயும் போது அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருவதையும் தெளிவாகக் காணமுடிகிறது.

கல்வி அமைச்சின் தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 304105 ஆகும்.

2022 ஆம் ஆண்டில், முதல் வகுப்பில் இணைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 11,889 குறைந்து 292,216 ஆக இருந்தது .

இதேவேளை குடும்ப சுகாதார பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில், இலங்கையில் 258,235 பேர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 30719 பேர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இந்த தரவுகளின்படி, மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர அறிக்கைகளின்படி,

புதிதாக திருமணமான தம்பதிகள் கூட குழந்தைகளைப் பெறுவதில் ஆர்வமில்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *