Connect with us

உள்நாட்டு செய்தி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்படும்

Published

on

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தம்புள்ளையில் இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.இந்த முறை மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.2022 ஆம் ஆண்டு 7 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் இந்த முறை அந்த எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதிக நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்பதன் ஊடாக போட்டித் தன்மை அதிகரிக்கும் எனவும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும் எனவும் ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *