Connect with us

உள்நாட்டு செய்தி

மலையிலிருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவனுக்கு கவலைகிடம்

Published

on

ரம்புக்கனை – எலகல்ல மலையில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் இராணுவ முகாமின் அதிகாரிகள் குழுவால் மீட்க்கப்பட்டு சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே விபத்தில் சிக்கியுள்ளார்.

இன்று காலை மற்றுமொரு மாணவர் குழுவுடன் எலகல்ல மலையில் ஏறச் சென்ற வேளையிலேயே குறித்த மாணவன் தவறி விழுந்துள்ளார்.

காயமடைந்த பல்கலைக்கழக மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீழே விழுந்த மாணவனை மீட்க பெரகல இராணுவ முகாமின் அதிகாரிகள் குழு பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *