Connect with us

உள்நாட்டு செய்தி

 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் தேரர் உட்பட இருவர் கைது

Published

on

மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் விற்பனைக்காக கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த வலம்புரி சங்கு மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எடுத்துச் செல்லப்பட்டபோது, விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *