Connect with us

உள்நாட்டு செய்தி

நீர் கொழும்பு மற்றும் புத்தளம் பிரதேசத்தில், இடம்பெற்ற இரு துப்பாக்கி சூடுகளில் இருவர் பலி..!

Published

on

நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை இன்று புத்தளம் – மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

காயமடைந்த நபர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *