Connect with us

உள்நாட்டு செய்தி

வர்த்தகர் கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

Published

on

மாத்தறை நகரில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற 5 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் காரில் வந்து வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் மாலிம்பட பிரதேசத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாத்தறை பொலிஸார் சந்தேக நபர்களை வர்த்தகரை கடத்த பயன்படுத்திய காருடன் கைதுசெய்ததுடன், வர்த்தகர் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபர்கள் 28 மற்றும் 53 வயதுடைய தெனிப்பிட்டிய மற்றும் தெலிஜ்ஜவில பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

தனிப்பட்ட வேலை நிமித்தம் மாத்தறைக்குச் சென்ற வர்த்தகர், நிதித் தகராறு காரணமாக கடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *