உள்நாட்டு செய்தி
50 பேக்கரிகள் மீது வழக்கு…!

பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) அதற்கான சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
பேக்கரிகள் மற்றும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத,
சுமார் 50 பேக்கரிகள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த நிறுவனங்கள் மீது எதிர்காலத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.