Connect with us

உள்நாட்டு செய்தி

இரத்த சோகையால் பாதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் வீதம் அதிகரிப்பு

Published

on

 

2023 ஆம் ஆண்டின் போஷாக்கு மாதம் தொடர்பாக இலங்கை குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் வீதம் 14.3% இலிருந்து 16.0% ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களில் அதிக வீதமானவர்கள் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அது 28.3 வீதமாகும். இரண்டாவது அதிகூடிய வீதமாக அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அது 25.6% வீதமாகும்.

கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், 26 மற்றும் 28 வாரங்களில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் சதவீதம் 22% என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை 11% ஆகவும், வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை 35.6% ஆகவும் உள்ளது.

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து, 15.1% ஆக உள்ளது. குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் அதிக சதவீதம் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது, இது 23.7% ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *