உள்நாட்டு செய்தி
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 660 கைது
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2021/01/arre-2.jpg)
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இன்றையதினம் (04.02.2024) ஞாயிற்றுக்கிழமை, நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
அதன்படி, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத் தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 108 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்
மேலும், இந்த நடவடிக்கையின் போது, 152 கிராம் ஹெரோயின் மற்றும் 134 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.