Connect with us

உள்நாட்டு செய்தி

சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்ட வைத்தியர் கைது

Published

on

தனது தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில் நடத்தப்படும் வைத்திய நிலையத்தில் சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண்ணிடம் தாகாத முறையில் நடந்து கொண்டதாக பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *