Connect with us

உள்நாட்டு செய்தி

பரிசு கொடுக்க வந்ததாக கூறி,மூதாட்டியின் 5 பவுண் தங்கச் சங்கிலி அபகரிப்பு…!

Published

on

திருகோணமலை – துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் இன்று காலை சுமார் 11 மணியளவில்,

பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த முதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கத்தகடு இல்லாத இருசக்கரவாகனத்தில் வந்த ஒரு இளைஞரால் மேற்படி கொள்ளை இடம்பெற்றதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையனை துரத்திச்சென்ற ஒருவரின் தகவலின் அடிப்படையில் தேடுதல் நடைபெறுவதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *