Connect with us

உள்நாட்டு செய்தி

23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Published

on

 சட்டவிரோதமாக படகு மூலம் வேறொரு நாடொன்றுக்கு பயணித்த வேளையில் வியட்னாம் கடல் எல்லையில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் சிலர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இதற்கமைய நேற்று முன்தினம்(19) 23 இலங்கையர்கள் வியட்னாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் 303 இலங்கையர்களுடன் பயணித்த படகொன்று, வியட்னாம் கடல் பரப்பில் வைத்து விபத்துக்குள்ளானது.இந்த  நிலையில், வியட்னாம் கடற்பாதுகாப்பு பிரிவினரால் அந்தப் படகிலிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டு, அதில் 151 பேர் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *