Connect with us

உள்நாட்டு செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் பங்கேற்கும்  கலந்துரையாடல் இன்று ஆரம்பம்

Published

on

சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் பங்கேற்கும்  கலந்துரையாடல்  வொஷிங்டனில் இன்று  ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில்  இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி  நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பங்கேற்கவுள்ளார்.

இதன் போது , சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்தித்து நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக  நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்

 6 மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும் மீளாய்வு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

ஏப்ரல் மற்றும் ஒக்டோர் மாதங்களில் நடைபெறுகின்ற   சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் பங்கேற்கும் பிரதான இரண்டு கலந்துரையாடல்களிலும் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  மேலும் தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *