Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழுவின்உறுப்பினர்கள் பிரதமருடன் கலந்துரையாடல்

Published

on

பிரதமர் தினேஷ்குணவர்தனவுக்கும்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்குமிடையில்  தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று  தற்போது  இடம்பெற்றுவருகின்றது.

பிரதமர் அலுலகத்தில்  முற்பகல் 11.30க்கு இந்த கலந்துரையாடல்  ஆரம்பமானது.

இந்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைய  தேர்தல் தொடர்பிலான  அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில்  கவனம் செலுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர்  நிமல்புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை  தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு  தொடர்ச்சியாக தெரிவித்துவந்த  நிலையில் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை   தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *