Connect with us

உள்நாட்டு செய்தி

இந்தியாவில் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் இலங்கை வீரர்

Published

on

இந்தியாவில் அசாம் குவாடியில் இடம்பெற்று வரும் மூன்றாவது சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றிய மெய்யப்பன் சசிகுமார் பத்தாயிரம் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.மேலும் 3000 மீட்டர் தடை தாண்டி போட்டியிலும் தங்கம் வென்ற அவர் 1500 மீட்டர் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.இலங்கை சார்பில் கலந்துகொண்ட பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் வேகநடை போட்டி மற்றும் சுத்தி எறிதல் போட்டியிலும் தங்க பதக்கங்களையும் பருதி வட்டம் வீசுதலில் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.மேலும் மற்றுமொரு இலங்கை வீரரான அசாங்க திசாநாயக்க ஐயாயிரம் மீட்டர் மற்றும் நாநூறு மீட்டர் ஓட்டப்போட்டிகளில் தங்கப்பதங்ககளையும், எண்ணூறு மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.மொத்தமாக இலங்கை சார்பாக பங்குப்பற்றிய மூன்று வீரர்களும் 6 தங்கம் உட்பட மூன்று வெள்ளி பதக்கங்களை இதுவரை பெற்றுள்ளனர்.