Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை

Published

on

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை  நீர் விநியோகம் அமுல்படுத்தப்படவுள்ளதாக என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை மலை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல மாநகரசபை பகுதிகளுக்கட்பட்ட பிரதேசங்களிலேயே நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது,

மேலும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேச  சபை பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

அத்துடன்  இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை 10 மணி நேர நீர் விநியோகத் தடை  குறித்த பகுதிகளில் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *