Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு தலைநகரின் எஞ்சியுள்ள‌ அபிவிருத்தி பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை!

Published

on

கொழும்பு தலைநகர நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன பணிப்புரை…

கொழும்பு தலைநகரின் நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட தொகை 457 மில்லியன் ரூபாவாகும். இத்திட்டத்தின் 99மூ பணிகள் இதுவரை முடிவடைந்துள்ளன.

கொழும்பு தலைநகரின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 55 உப திட்டங்கள் உள்ளன. நகர அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம், மற்றும் கொழும்பு மாநகரசபை என்பன இணைந்து இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. கொழும்பு மாநகரசபை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை, தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை மற்றும் கொலன்னாவ மாநகர சபை ஆகியவை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் 3 நீரேற்று நிலையங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. அம்பத்தலே நீரேற்று நிலையம், புனித செபஸ்டியன் வடக்கு தெ}ரகுலு நீரேற்று நிலையம் மற்றும் புனித செபஸ்டியன் தெற்கு நீரேற்று நிலையம் ஆகிய மூன்று நீரேற்று நிலையங்கள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் புதிய முத்துவெல்ல சுரங்கப்பாதை மற்றும் டொரிங்டன் சுரங்கப்பாதையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கால்வாய்களை மேம்படுத்துதல் மற்றும் கால்வாய் மாற்று திட்டங்கள் மற்றும் ஈரநில பூங்காக்கள் மற்றும் நேரியல் பூங்காக்கள் ஆகியவற்றின் மேம்பாடும் இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் கொலன்னாவ கால்வாய் திருப்பம், மாதிவெல கிழக்குத் திருப்பம், பேரே லேக் லீனியர் பார்க் மற்றும் கோட்டே ரெம்பார்ட் பூங்கா ஆகியவை அடங்கும். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உலக நகர தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தலைமையில் கோட்டே ரெம்பார்ட் ஈரநில பூங்கா பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. அதற்காக செலவிடப்பட்ட தொகை சுமார் 400 மில்லியன் ரூபா ஆகும்.

கொழும்பு மாநகர நகர அபிவிருத்தித் திட்டத்தின் பிரதான நோக்கம் கொழும்பு நீர் வடிநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவது, சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் உள்கட்டமைப்பை புனரமைப்பது மற்றும் பராமரிப்பது ஆகியவை மற்ற நோக்கங்களாகும்.

இத்திட்டத்தின் கீழ் கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கொலன்னாவ மாநகர சபை ஆகியவற்றினது உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது.