Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலையொன்றில் இருந்து போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு

Published

on

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இது தொடர்பில் தெரிவிக்கும் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த உணவகத்தில் 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் மற்றும் 38 போதை மாத்திரைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவுமு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது எனறும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி போதைப்பொருள் வேறு தரப்பினரால் கொண்டு வரப்பட்டு உணவகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *