Connect with us

உள்நாட்டு செய்தி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Published

on

கம்பஹா பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

பஹலகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா, அக்கரவிட பிரதேசத்தில் பெண்ணொருவரின் கைப்பையை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.