Connect with us

உள்நாட்டு செய்தி

புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் – மனோ

Published

on

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.

இதற்காக உருவாக்கப்படும் தலைமைத்துவ சபையில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைவராக செயற்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூடிய விரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணி டெங்களான புதிய கூட்டணி உருவாகும் எனவும் அவர் மேலும்; கூறியுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பு வரைபு வல்லுனர் குழுவிற்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஐந்து பிரதான தலைப்புகளில் கொள்கை ஆலோசனைகளை சமர்பித்துள்ளது.

மனோ கணேசன் தனது முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை கூறியுள்ளார்.