Connect with us

Sports

இலங்கையணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது

Published

on

ஆசிய கிண்ண T20 தொடரின் 5 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் ஹபிப் ஹொசைன் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மெஹிதி ஹசன் 38 ஓட்டங்களையும், மொஹமதுல்லாஹ் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 60 ஓட்டங்களையும் அணித் தலைவர் தசுன் சானக 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார்.

பந்து வீச்சில் எபடோட் ஹொசைன் 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இதனால் இலங்கையணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *