Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை – ஈரான் இருதரப்பு உறவு குறித்த கலந்துரையாடல்

Published

on

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே 2022 ஆகஸ்ட் 15ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட காலம் நீடித்த சுமுகமான உறவுகள் குறித்து குறிப்பிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்து தூதுவருக்கு விளக்கினார்.

இலங்கை – ஈரான் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே, இலங்கைக்கான ஈரான் குடியரசின் தொடர்ச்சியான உதவிகளை உறுதியளித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *