Connect with us

உள்நாட்டு செய்தி

சென்கிளயர் தோட்டத்தில் போராட்டம்

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை, சென்கிளயர் தோட்டத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றனர்.

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெறும் போராட்டத்துக்கு தமது முழு ஆதரவையும், மலையக மக்கள் சார்பில் வெளிப்படுத்தினர்.

அதேபோல பெருந்தோட்டதொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், காணி உரிமை வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோஷங்களும் எழுப்பட்டன.