Connect with us

உள்நாட்டு செய்தி

உதவுங்கள், வீதிக்கு இறங்க வேண்டிய தேவையில்லை – பிரதமர்

Published

on

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையின் போது எதிர் கட்சியினரால் ஏற்பட்ட இடையூறு காரணமாக பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய பிரதமர்…

“நாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம். அதனை முன்​னெடுக்க உதவுங்கள், வீதிக்கு இறங்க வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்றத்தை கூட்டி, விவாதத்தை நடத்தி ​வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.

இதன்போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த நிலையில், எதிர்க் கட்சியினர் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.