Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசி

Published

on

இன்று (19) முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

எத்தகைய பிரச்சினை வந்தாலும் கட்டுப்பாட்டு விலையில் அரிசி சந்தைக்கு விற்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் இவ்வாறு அரிசியை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.