Connect with us

உள்நாட்டு செய்தி

காங்கிரஸ் என்றும் உங்களுடன் இருக்கும் – ஜீவன்

Published

on

நாட்டில் இன்று எல்லா துறைகளிலும் ‘சிஸ்டம்’ மாறியுள்ளது. ஆனால் பெருந்தோட்டத்துறை மட்டும் 150 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே உள்ளது. இந்நிலைமை மாற வேண்டும்.

அதனை செய்வதற்கே நாம் வந்துள்ளோம். இதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.   

பாலின சமத்துவம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அட்டன் மாநிலத்திற்கான மகளிர் தின விழா 13.03.2022 அன்று காலை கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்