Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று “ஒரு மணித்தியால மின் வெட்டு”

Published

on

இன்று நாடு பூராகவும் சுழற்சி முறையிலான ஒரு மணித்தியால மின் வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

போதியளவிலான மின் உற்பத்தி இல்லாததால் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்த்த ஏனைய மாகாணங்களில் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், தென் மாகாணத்தில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணித்தியால மின் வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.