Connect with us

Sports

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்

Published

on

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட காலத்திற்குள் பந்துவீச தவறிய காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கான போட்டி கட்டணத்தில் 20 வீதம் அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ​பேரவை அறிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேச போட்டியில் தகாத மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நன்னடத்தை விதி 2.3 ஐ மீறியதாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

துடுப்பெடுத்தாடும்போது, பந்தை தவறவிட்டதை அடுத்து அவர் தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை ஸ்டம்பில் இருந்த ஒலிவாங்கியில் பதிவாகி உள்ளது.

இது அவரது ஒழுக்கம் சார்ந்த விடயத்தில் ஒரு பாதக புள்ளியை சேர்த்துள்ளதுடன், அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.