Connect with us

உள்நாட்டு செய்தி

எவ்வித மின் தடையும் திட்டமிடப்படவில்லை

Published

on

நாட்டில் மறு அறிவித்தல் வரை எவ்வித மின் தடையும் திட்டமிடப்படவில்லை என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாய்க்க இதனை தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பில் இன்று (31) மீளாய்வு நடத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது.

தற்போதைய நிலைமை குறித்து இன்று பிற்பகல் கலந்துரையாடப்பட்டு மின்வெட்டு ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பில் உறுதியான அறிக்கை வெளியிடப்படும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.