Connect with us

உள்நாட்டு செய்தி

மவுஸாகலை நீர்தேக்கத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

Published

on

மவுஸாகலை நீர்தேக்கத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி முதல் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

மவுஸாகலை நீர்தேக்கத்தின் நீர் பாசன பொறியியலாளர்களால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

மத்திய மலை நாட்டில் உள்ள பெரும் பாலான குளங்கள் சுத்தப்படுத்தப்படாமையாலும், போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்காமையாலும் நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைவடைந்து வருகின்றது.

குறிப்பாக 25 வீதத்தால் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வாக தற்போது இடைக்கிடையே மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

நிலைமையை கருத்தில் கொண்டு மவுஸாகலை நீர் தேக்கத்தில் இருந்து கெனியோன் வரை நீரை கொண்டுச் செல்லும் சுரங்க பாதையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *