Connect with us

உள்நாட்டு செய்தி

நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐந்து பேரில் நால்வர் சடலங்களாக கண்டெடுப்பு, ஒருவரை காணவில்லை

Published

on

எட்டம்பிட்டிய, கெரந்தி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு இளைஞன் மற்றும் மூன்று யுவதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேற்படி குழுவினர், எட்டம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *