Connect with us

உள்நாட்டு செய்தி

பாணந்துறை துப்பாக்கி சூடு தொடர்பில் மற்றுமொரு தகவல்

Published

on

கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வளான குற்றத்தடுப்பு பிரிவினர் ஹொரண திக்ஹேன பகுதியில் பேதைப் பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை நடத்தினர்.

அதன்போது 42 கோடி மதிப்புள்ள ஹெரேயின் போதை பொருள் 42 கிலோ கைப்பற்றப்பட்டமையே பாணந்துறை கேதுமதி வைத்தியசாலைக்கு முன்னால் அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடுஅ நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பியூலன்ஸ் வாகனம் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பியூலன்ஸ் சாரதிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸர் மேலும் தெரிவித்தனர்.