Connect with us

உள்நாட்டு செய்தி

“பசுமை விவசாயம்”: அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை – ஜனாதிபதி

Published

on

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வாகன இறக்குமதியின் போது இலத்தரனிய வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசுமை விவசாயம் என்ற அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்த பல முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

ஆகவே குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களைத் தூண்டும் செயற்பாடுகளை நிறுத்துமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு அனைவரும் கட்சி அரசியலை தவிர்த்து ஒத்துழைக்க வேண்டும் எனவும் அது மக்கள் பிரதிநிதிகளின் தேசியப் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி கூறினார்.