Connect with us

Sports

“3 வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கம்”

Published

on

தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது.

குறித்த 3 வீரர்களுக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபாராதமும், 1 வருட காலம் சர்வதேச போட்டிகளில் விளையாட தடையும், 6 மாத காலம் உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள சிம்பாம்வே அணிக்கு எதிரான தொடரில் இம் 3 வீரர்களும் விளையாடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம் 3 வீரர்களும் இங்கிலாந்து சுற்றுத் தொடரின் போது உயிர்க் குமிழி முறையை மீறி கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இரவு இவர்கள் மூவரும் டரம் பிரதேசத்தில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *